Lebal

Monday, April 30, 2012

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஆயுதத் தளபாடங்களைப் பார்வைக்கு வைத்திருக்கும் சிங்கள அரசு!


ltte-01தமிழீழ விடுதலைப்புலிகளால் சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட போராயுதங்களை போர் நினைவுச் சின்னமாக பாதுகாத்து வைத்திருக்கும் அரசாங்கம் அவற்றின் மூலம் தான் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதை முல்லைத்தீவில் காணமுடிகின்றது.(படங்கள் இணைப்பு)
கடந்தவாரம் புதுக்குடியிருப்பு- முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டுள்ள நிலையில், முன்னர் சிங்கள மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த
தமிழரின் சொத்துக்களை மீண்டும் தமிழர்கள் காணக்கூடியதாகவுள்ளது.
இவற்றில் புலிகளால் தமது சொந்த முயற்சியல் உருவாக்கி எடுக்கப்பட்ட பாரிய படகுகள், சிறிய நீர் மூழ்கி கப்பல்கள், மற்றும் போர் ஆயுதங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காட்சிக் கூடத்தை தினசரி பெருமளவான மக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
இதனை கடந்த சில தினங்களாகவே தமிழர்கள் சென்று பார்வையிட்டுத் திரும்புகின்றனர். அதன் மூலம் உள்ளார்ந்தமாக தமது போர்த்திறனையும், எமக்கிருந்த ஆற்றலையும் கண்டு ஒவ்வொரு தமிழனும் உள்ளார்ந்தமாக மகிழ்ந்து கொள்கின்றார்கள்.
source:sankathi


No comments:

Post a Comment