Lebal

Monday, July 30, 2012

யாழ்.அரியாலையில் மகாத்மா காந்திசிலை விசமிகளால் உடைத்துச் சேதம்!

யாழ்.அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்.தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சிலை உடைப்பு தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லையென்றும் இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் யாழ்.காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment