Lebal

Thursday, May 08, 2014

சிறிலங்காவினால் தடைவிதிக்கப்பட்ட 32 பேர் இந்தியாவில் – மத்திய புலனாய்வுத்துறை தீவிர விசாரணை


பயங்கரவாத தொடர்புள்ளவர்கள் என்று, தடைவிதிக்கப்பட்ட 424 பேரில், 32 பேர் இந்தியாவில் வசித்து வருவதாக, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இவர்களின் பின்புலம் குறித்து, இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காஅரசு, இந்திய வெளியுறவு அமைச்சு மூலம் மத்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்பியுள்ள பட்டியலில், 32 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சிறிலங்காவிஜல் விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையே நடந்த போரின்போது வெவ்வேறு காலகட்டங்களில் இவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தவர்கள்.


இவர்களை "இந்தியாவில் வசிப்பவர்கள்' என்று சிறிலங்கா அரசு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில். அப்பாதுரை அமலன், ராசதுரை சசீகரன், சிவஞானசுந்தரம் சிவகரன், யோகநாதன் திலீபன், சந்தியாபிள்ளை, சிவசேகரன் விஜயநீதன், குணசீலன் ரமணன், குணேந்திர ராஜா ஜெயராஜ், அம்பிகேதேசன் ஜனார்தனன், சந்திரபோஸ் ஜெயரூபன், போலிகாப் அலெக்சாண்டர், நவரத்னம் சதீஸ்வரன், சுப்பிரமணியம் சதீஸ்குமார், கமலதாஸ் கௌஷில்யா, ரூபசிங்கம் ஜனகாந்த், ரத்னசிங்கம் நித்தியானந்தம், பரமானந்தன் சிவராமகிருஷ்ணன், தம்பிதுரை சிவசிதம்பரநாதன், அமுதன், அந்திரஹென்னடிகே சமிந்தா தர்ஷனா, நவாஸ் (எ) சுரேஷ், ராஜேந்திரன் மூர்த்தி, சுதர்சன் கயிலநாதன், விக்னேஸ்வரன் பரமேஸ்வரி, விக்னேஸ்வரன் கந்தப்ப முத்தையா பிள்ளை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை, மேலும் ஆறு பேரின் பெயர்கள் மற்றும் அவர்களின் தற்போதைய வசிப்பிட முகவரியையும் சிறிலங்கா அரசு வெளியிட்டுள்ளது.

இளங்குமரன் ரஞ்சிதகுமாரி (வாலாஜாபேட்டை); செபஸ்தியன் பிள்ளை ரவிகுமார் (திண்டுக்கல் அகதிகள் முகாம்); கதிர்வேலு சிவஞானசெல்வம் (திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை); அமல்ஆரோக்கியசாமி சந்திரவதனா (ஆதம்பாக்கம், சென்னை); அகநிலா (சேலையூர், சென்னை); தங்கய்யா தங்கம் (முதலியார்குப்பம், காஞ்சிபுரம்) ஆகியோரே அவர்களாவர்.

இவர்கள் தவிர,இந்தியாவில் வசித்து வருவதாகக் குறிப்பிட்டு வேலுப்பிள்ளை ரேவாதன் என்பவரின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அவர் பயங்கரவாத வழக்குகளில் சிறிலங்கா அரசால் தேடப்படும் குற்றவாளி என அனைத்துலக காவல்துறை அறிவித்துள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

2010ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியா  - சிறிலங்கா கைதிகளை பரஸ்பரம் ஒப்படைக்கும் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.

அந்த அடிப்படையில் இவர்கள் இந்தியாவில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், இவர்களை கைது செய்து முறைப்படி சிறிலங்காவிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், ஒரு நாட்டில் இருந்து தப்பித்து இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் அடைந்த இவர்களை எந்த அடிப்படையில் சிறிலங்காவிடம் திரும்ப ஒப்படைப்பது என்பதில் சட்டச் சிக்கல் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சட்டத்துறையுடன் மத்திய உள்துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment