யுத்த
அணுகுமுறைகளில் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் சிறப்பு தேர்ச்சி
பெற்றவர்களாக இருப்பதனால் அவர்களை படையில் இணைத்துக் கொள்வதால இலங்கை
படையினருக்கு நன்மை ஏற்படும் என இந்திய அமைதிப் படையில் அங்கம் வகிந்த
அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார்.படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புக்களில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டவில்லை என்றே தாம் முன்னர் கருதியதாகவும். எனினும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் 90 வீதமான தமது சந்தேகங்களுக்கு தீர்வு கிட்டியுள்ளது.
இலங்கை நல்லிணக்க முனைப்புக்களை சரியான முறையில் மேற்கொண்டுவருவதாக தென்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரபுரீதியான யுத்த அணுகுமுறைகளில் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இதனால் இவர்களை படையில் இணைத்துக் கொள்வது நன்மைகளை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment