Lebal

Wednesday, February 12, 2014

"பிரபாகரனுக்கு 500 மில்லியனை கொடுத்து வென்றவர் மகிந்தர்: பொன்சேகா !


பிரபாகரனுக்கு 500 மில்லியனைக் கொடுத்து தமிழ் மக்களை வாக்களிக்காமல் செய்துவிட்டு வெற்றியடைந்த ஒருவர், தம்மை துரோகி என்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்தார். சரத் பொன்சேக்கா தலைமையில் நேற்று அலுத்கம – தர்கா நகரில் கூட்டம் ஒன்று ஒன்று இடம்பெற்றது. கூட்டத்தில் தலமை தாங்கிப் பேசியபோதோ அவர் இவ்வாறு தெரிவித்தார்.


“நாங்கள் பிரபாகரனின் ஆவியெனவும், தேசத் துரோகிகள் என்றும் கூறுகின்றனர். 2005 ஆம் ஆண்டில் பிரபாகரனுக்கு 500 மில்லியன் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டு பிரபாகரன் தமிழ் மக்களை வாக்களிக்க விடாது தடுத்தார். இதனூடாக, ஒருவர் வெற்றி பெற்றார் என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். அது மகிந்தரை தான் என்பது வேறு விடையம். ஆனால் பெயரைச் சொல்லிப் பேச, சரத் பொன்சேகாவால் முடியவில்லை. அப்படி அவர் பேசினால் மீண்டும் சிறை செல்ல நேரிடும் அல்லவா.

இந்த 500 மில்லியனைக் கொண்டு பிரபாகரன் மலேஷியாவில் கடற்புலிகளுக்கு தேவையான படகுகளை வாங்கினார். அந்த படகுகளைக் கொண்டு வந்து எமது கடற்படையினரையும் இராணுவத்தினரையும் கொலை செய்தனர். இப்போது யார் துரோகியென நீங்கள் கூறுங்கள் ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். சரத் பொன்சேகா கூறிவரும் இதுபோன்ற கருத்துக்கள் ஆதாரமற்றவை என்பது அனைவரும் அறிந்த விடையம்.

No comments:

Post a Comment