ராஜீவ் கொலை: 7 பேரை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு மனு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை தமிழக அரசு விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்.
இதேவேளை, பேரறிவாளன் உட்;பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
முருகன், சாந்தன், நளினி உள்பட 7 பேரை விடுவிப்பது சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என்றும், அவர்களை விடுவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தொடரக் கூடாது என்றும் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.