Lebal

Monday, March 17, 2014

கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது தொடர்பான சில விளக்கங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவது தொடர்பான சில விளக்கங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


கடந்த 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்து அறிவித்தது. மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு இவை திரும்ப பெறப்படும். பொதுமக்கள், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் இறுதி வரை வங்கிகளுக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் நோட்டுக்களை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை. வங்கி வாடிக்கையாளர்களும், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. 2005 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையாளம் கண்டு கொள்ளலாம். பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment