Monday, March 17, 2014

நெய்வேலி என்.எல்.சி., ஊழியர்களுக்கும், மத்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது

நெய்வேலி என்.எல்.சி., ஊழியர்களுக்கும், மத்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டது. மத்திய தொழில் படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒப்பந்த பணியாளர் ராஜ்குமார் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் பிணத்துடன் கடலூர்- விருத்தாச்சலம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.

No comments:

Post a Comment