Saturday, February 05, 2011

மஹிந்த ரொபேர்ட் பிளேக்கினை ரெக்சாசில் சந்தித்துள்ளார்?

அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திருக்கிறார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது திடீர் அமெரிக்கப் பயணம் மர்மம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பயணம் தொடர்பாக வேறுபட்ட ஊகங்கள் வெளியிடப்படுகின்றபோதும் மஹிந்தவின் திடீர்ப் பயணத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன என்பது இன்னமும் இரகசியமாகவே உள்ளது.



உப்புல்யோசப் பெர்னான்டோவின் கட்டுரையை தமிழாக்கியவர் தி.வண்ணமதி

அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ பயணித்தபோது தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திருக்கிறார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினது திடீர் அமெரிக்கப் பயணம் மர்மம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. இந்தப் பயணம் தொடர்பாக வேறுபட்ட ஊகங்கள் வெளியிடப்படுகின்றபோதும் மஹிந்தவின் திடீர்ப் பயணத்தின் உண்மையான நோக்கம்தான் என்ன என்பது இன்னமும் இரகசியமாகவே உள்ளது. இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொண்ட அமெரிக்காவிலுள்ள இனக் கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு மஹிந்தவுக்கு எதிரான போர்க் குற்ற வழக்கு ஒன்றை வோஷிங்டனில் தாக்கல்செய்திருந்தது.


சரத்பொன்சேகாவை விசாரித்த உள் நாட்டு திணைக்களம் ஏன் சரத் பொன்சேகாவிற்கு பொறுப்பாக இருந்த மஹிந்த இராஜபக்‌ஷவை விசாரிக்க முடியாது?

கடந்த 2009 ஒக்ரோபரில் இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து அவர் உடனடியாகவே நாடு திரும்பியிருந்தார். எவ்வாறிருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருந்தபோது இதுபோன்ற நிலைமை அவருக்கு ஏற்படவில்லை. ஒரு நாட்டினது அரச தலைவர் என்ற வகையில் மஹிந்தவிற்கு இராஜதந்திரரீதியிலான பாதுகாப்பு இருப்பதனாலேயே, சரத்பொன்சேகா எதிர்கொண்டதைப் போன்ற நிலைமையினை மகிந்த ராஜபக்ஷ எதிர்கொள்ளவில்லை எனப்படுகிறது. முப்படைகளின் துணைத் தளபதி என்ற வகையில் பொன்சேகாவிற்கும் அதே இராஜதந்திரப்பாதுகாப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால், பொன்சேகா தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவிற்குச் சென்றமையால் இந்த வசதி பொன்சேகாவிற்கு இல்லாது போய்விட்டது. ஆதலினால்தான் பொன்சேகா உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.


தனிப்பட்ட பயணம் எனின் இராஜதந்திர பாதுகாப்பு ஏன்?

மஹிந்தவும் தனிப்பட்ட பயணமாகத்தானே அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார். இருந்தும் அவருக்கு மாத்திரம் ஏன் இராஜதந்திரப் பாதுகாப்பு வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.பொன்சேகா கிறீன் காட்டினை வைத்திருக்கும் ஓர் அமெரிக்கக் குடிமகன் என்பதால் அவரை விசாரணைக்கு உட்படுத்தும் உரிமை அந்த நாட்டினது உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உண்டு. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுடன் தொடர்புடைய அனைத்துச் சூழல்களையும் அதனுடன் இணைந்த சம்பவங்களையும் கவனத்தில் எடுப்போமானால், இந்த விடயத்தின் அதிக நலன் கொண்ட தரப்பினர் யாரோ அவர்கள் "ஒளித்துப்பிடித்து' விளையாடுவது தெளிவாகத் தெரியும். அமெரிக்காவின் ரெக்சாஸ் பகுதிக்கு அதிபர் ராஜபக்ஷ பயணித்தபோது, தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் துணை இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸாஸில்தான் இருந்திருக்கிறார்.

ரொபேட் பிளேக்கினை மஹிந்த சந்தித்துள்ளார்

மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவின் ரெக்ஸாஸில் வைத்து றொபேட் ஓ பிளேக்கினைச் சந்தித்தாரா என ஊடாகவியலாளர்கள் கேட்டபோது, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் தெளிவான பதில் எதனையும் வழங்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவுடன் உத்தியோகபூர்வமான சந்திப்புகள் எதுவும் இடம்பெறாது என அந்தப் பேச்சாளர் கூறியிருக்கிறார். ஆனால், மகிந்த ரெக்ஸாசுக்குச் சென்றிருந்த அதே காலப்பகுதியில் றொபேட் ஓ பிளேக்கும் ரெக்ஸ்ஸாஸில் இருந்திருப்பது ஏதோவொன்றைச் சொல்லுகிறது.ரெக்ஸ்ஸாஸ் பிராந்தியத்திலுள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காகவே றொபேட் ஓ பிளேக் ரெக்ஸாசுக்குச் சென்றிருந்தார் என இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் கூறுகிறார். பிளேக்கினது ஒப்புதலின்றி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்குப் பயணித்திருப்பார் என்பதை ஏற்றுக்கொள்வது கடினமானதே. மஹிந்த அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் போது அங்கிருக்கும் அமெரிக்க வாழ் தமிழர்களால் பிரச்சினைகள் ஏதாவது தோன்றுமா என இவங்கை ஜனாதிபதி மஹிந்தவோ அன்றி வெளிவிவகார அமைச்சர் பீரிஸோ பிளேக்கினைத் தொடர்பு கொண்டு கட்டாயம் கேட்டறிந்திருப்பார்கள்.

இராஜபக்சவின் இலண்டன் பயணம்

அண்மையில் லண்டனுக்கு பயணம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவமானகரமான அனுபவத்தினைச் சந்தித்திருந்த பின்னணியில், பிளேக்கிற்குத் தெரியாமல் அல்லது அவரது அறிவுரைகளைக் கேட்டறியாமல் அதிபர் மஹிந்த அமெரிக்காவிற்குப் பயணம் செய்யத் துணிந்திருக்கமாட்டார். றொபேட் ஓபிளேக் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த காலப்பகுதியில் மகிந்தராஜபக்ஷவுடன் மாத்திரமல்லாது அவரது குடும்பத்தினருடன்கூட மிக நெருங்கிய உறவினைக் கொண்டிருந்தார் என்பது ஊரறிந்த விடயம். றொபேட் ஓ பிளேக் தூதுவராக கொழும்பில் இருந்த காலப்பகுதியில் ராஜபக்ஷவின் அழைப்பினை ஏற்று மஹிந்தவின் சொந்த ஊரான தங்காலை பகுதியிலுள்ள "கால்ரன் விடுதி" என்ற ஜனாதிபதி ராஜபக்ஷவின் இல்லத்தில் ரொபேட் ஓ பிளேக் தனது குடும்பத்துடன் ஒரு நாளைச் செலவிட்டடார் எனக் கூறுப்படுகிறது. இதன்போது மஹிந்தவினது குடும்பத்துடன் இணைந்து றொபேட் ஓ பிளேக் கடலில் நீச்சலடித்தார்'' என்று கூறப்படுகிறது.


மஹிந்த ரெக்ராசில் இருந்தபோது ரொபெட்பிளேக்கும் அங்கு இருந்துள்ளார்.

இந்தப் புறநிலையில் அதிபர் மஹிந்த ரெக்ஸாஸூக்குச் சென்றிருந்தவேளையில் றொபேட் ஓ பிளேக்கும் அந்தப் பிராந்தியத்தில் இருந்தமையானது ஒன்றும் எதேச்சையாக நடந்த விடயமல்ல என்பது மட்டும் தெளிவு. இவர்கள் இருவரும் உத்தியோகபூர்வமற்ற முறையில் ரெக்ஸாஸிசில் சந்தித்திருப்பதாகத்தான் தெரிகிறது. இது மகிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட பயணமாக இருந்தாலும் பிளேக்கினைச் சந்திக்கும் எண்ணம் மகிந்தவிற்கு இருந்திருக்கிறது. இதனால் தான் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வினையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸையும் மஹிந்த தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். கடந்த ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோதும் பிளேக்கினைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்ததார் எனச் செய்திகள் வெளிவந்திருந்தன. தனது இராஜதந்திர சிந்தனைகளுக்கு ஏற்ப மஹிந்த அரசினைச் செயற்படவைக்கும் எண்ணத்தில்தான் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவினையும் அவரது சகோதரர் கோத்தாவினையும் தனிப்பட்டரீதியில் தான் சந்தித்துக் கலந்துரையாடினார் என்று றொபேட் ஒ பிளேக் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கை அரசைப் போலவே, தேவை கருதியே அதிபர் ராஜபக்ஷவினது அமெரிக்கப் பயணம் தொடர்பான செய்திகளை பிளேக் வெளியே குறிப்பிடாதிருந்தார். அமெரிக்காவில் ஜனாதிபதி ராஜபக்ஷ தங்கியிருக்கும் வதிவிடத்தினை அடையாளம் காணுவது அங்கு வாழும் புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஒன்றும் கடினமான பணியன்று. பிரிட்டனுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் குறைந்தளவு தமிழர்களே இருக்கிறார்கள்.எவ்வாறிருப்பினும் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.

மஹிந்த வரும்போது பெரியளவில் ஆர்ப்பாட்டங்கள் செய்யவேண்டாம் என ரொபேட் பிளேக் உருத்திரகுமாரனுக்கு கூறி இருந்தாரா?

உருத்திரகுமாரனைக் கைதுசெய்வதோடு அவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு சிறிலங்கா அரசு பிளேக்கிடம் கோரிக்கை விடுத்திருந்தது. உருத்திரகுமாரனுக்கு எதிராகப் பயங்கரவாதம்சார் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லையென்பதால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாது என பிளேக் கைவிரித்து விட்டாராம். றொபேட் ஓ பிளேக் உருத்திரகுமாரனுடனும் தொடர்புகளைப் பேணுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அதிபர் ராஜபக்ஷ அமெரிக்காவிற்கான பயணத்தினை மேற்கொள்ளும்போது கடுமையான எதிர்ப்புப் போராட்டங்கள் எதிலும் ஈடுபடவேண்டாம் என பிளேக் உருத்திரகுமாரனைக் கோரியிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் இனக் கொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அமைந்த எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.

எது எவ்வாறிருப்பினும் இலங்கையில் இடம் பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக "ஒளித்துப் பிடித்து விளையாடும்" அணுகுமுறையினை பிளேக்கும் அமெரிக்காவும் கைக்கொள்ளும் காரணம்தான் என்ன?

No comments:

Post a Comment