Friday, November 18, 2011

வடக்கில் காணிப் பதிவு அருமையான, அபூர்வமான திட்டமாம்-யாழ்.மாநகர சபை மேயர்

தமிழர் பகுதியான வடக்கில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணிப்பதிவு எந்தவித உள்நோக்கம் கொண்டதில்லை என யாழ்ப்பாண மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில் காணிப் பதிவு என்பது மிகவும் அருமையான, அபூர்வமான திட்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தெற்கில் 2007 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட காணிப் பதிவு போன்றே வடக்கிலும் தற்போது இடம்பெறுகிறது.


ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ சிங்களவர்களைக் குடியமர்த்தவே வடக்கில் காணிப் பதிவு என்று கூறுகிறது. அது முற்றும் முழுதான பொய்.

அவர்கள் கூறுவது போல் அரசாங்கம் வடக்கில் காணிப் பதிவின் மூலம் சிங்களவர்களைக் குடியேற்றப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment