தமிழ் மக்களுக்கு ஒரு
தனிநாட்டை பெற்றுக் கொடுக்கக் கூடியவராக இருந்தவர் தமிழகத்தின் முன்னாள்
முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். அவர் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால்
ஈழத் தமிழர்களுக்குத் தனிநாடு கிடைத்திருக்கும் என நாம் தமிழர் கட்சித்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை.
அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்.
இன்று தமிழர்களால் நிம்மதியாக கடலுக்குச் சென்று மீன்பிடிக்க முடியவில்லை. காவிரி நீர் தர மறுக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணையை உடைக்கப்போவதாகக் கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நேரத்திற்கு ஒருமாதிரி பேசுகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணையை உடைத்தால் தமிழகத்தில் மலையாளிகள் யாரும் இருக்க முடியாது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை அவர்கள் சிக்கலாகக் கருதினால் எதிர் விளைவுகள் ஏற்படும் என்றார்.
No comments:
Post a Comment