

எது எவ்வாறு இருப்பினும் அமெரிக்க நீதிமன்றம் தனக்கு எதிராக தீர்ப்புச் செல்லிவிடும் என்ற பயம் காரணமாகவே மகிந்தர் தற்போது ஒரு வக்கீலை நியமித்துள்ளார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த வழக்கில் மகிந்தர் குற்றவாளியாக இனங்காணப்பட்டாலும் அவர் கைதுசெய்யப்படமாட்டார். ஏன் எனில் இது ஒரு நஷ்ட ஈடு வழக்காகும். மகிந்தர் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் 3 தமிழர்களும் கோரியுள்ள நஷ்ட ஈட்டுத்தொகையை அவர் கட்ட நேரிடும். இல்லாது போனால் அவர் அமெரிக்கா வரமுடியாத நிலை தோன்றும். அவர் ஒரு நாட்டின் அதிபர் அந்த வகையில் அவருக்கு வெளிநாடுகளில் இருக்கும் சிறப்பு அதிகாரங்கள் இன்னமும் இருக்கின்றன. ஆனால் இது கைதுசெய்யும் விடையம் இல்லையே ! காசு சம்பந்தப்பட்ட விடையமாச்சே. எனவே அவருக்கு விசா வழங்குவதில் பிரச்சனை தோண்ற வாய்ப்புகள் இருப்பதாவும் சொல்லப்படுகிறது.

No comments:
Post a Comment