Monday, February 20, 2012

சனல்-4 இன் புதிய காணொளி வெளிவரவுள்ளது.

சிறீலங்காவில் கொலைக்களம் என்ற காணொளியினை வெளியிட்ட சனல்-4 தொலைக்காட்சியில் மீண்டும் புதிய போர்குற்ற ஆதாரங்கள் அடங்கிய காணொளிகள் வெளியிடப்படவுள்ளது.

இந்த காணொளில் இறுதில் களமுனையில் அரசியல்துறைசார்பொறுப்பாளர்களுடன் நின்ற போராளிகள் மற்றுமக்கள் பலர் தமது நேரடி சாட்சியங்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் அரசியல்துறைப்பொறுப்பாளர் ப.நடேசன், புலித்தேவன், மற்றும் தமிழகத்துடனும் ஏனைய நாடுகளுடனும் இறுதிவரை தொடர்புகளை பேணிய பல பொறுப்பாளர்களின் உண்மைச்சம்பவங்கள் இந்த காணொளிசாட்சியில் வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச்மாதம் முதல் வாரம் இந்த காணொளி வெளிவரவுள்ளது. சனல்-4ன் சிறீலங்காவின் கொலைக்களம் என்ற காணொளியினை வெளியிட்ட ஜேன்சிரோ என்ற ஊடகவியலாளரே இந்த ஆவணகாணொளியினை தயாரித்துள்ளார். ஜெனிவாவில் ஜக்கியநாடுகள் மனிதஉரிமைபேரவையின் கூட்டம் நடைபெறும் காலப்பகுதிக்கு முன்னாரான நாட்களில் இந்காணொளி வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment