Saturday, February 11, 2012

டென்மார்க்கில் சிறிலங்காவின் 64 ஆவது சுதந்திர தினத்தை கண்டித்து கவனயீர்ப்புக் கண்காட்சி


சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழினம் சுதந்திரத்தை இழந்து நிற்கின்றது.ஈழத்தமிழர்கள் இன்றும் மரணப்போராட்டத்தில் நிற்கின்றனர் என்பதனை டென்மார்க் மக்களுக்கு இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்டுகிறது‚ சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளையும்‚ ஆக்கிரமிப்புகளையும் தாங்கி  நிற்கிறது. டெனிஸ் மக்கள் ஆர்வத்தோடு  பார்வையிட்டுச் செல்கின்றனர் சனல் 4 இல் வெளிவந்த கொலைக்களம்  தொகுப்பு அடங்கிய ஒளித்தட்டுகள் டெனிஸ் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. கவனயீர்ப்புக் கண்காட்சி அனைத்து நகரங்களிலும் தொடர்ந்து நடைபெறும்.எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய முக்கியமான பணிகளை‚ தேவைகளை எந்நேரத்திலும் மறவாது அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கும்வரை புலம்பெயர் தமிழர்கள் நாம் உழைத்திடுவோம்.


No comments:

Post a Comment