Monday, February 13, 2012

முல்லைபெரியாறு கேரளா மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - தமிழர் புரட்சி முழக்கம்

முல்லைபெரியாறு கேரளா மக்களுக்கு பாதுகாப்பு இல்லை 
கேரளா மலையாளிகள் போரட்டம் !

மலையாளிகளின் பாதுகாப்பு தான் எமக்கு வேண்டும் 
கேரளா உரிமைதான் முதல் இடம் 
பெரியாறு உடைக்க வேண்டும் 
ஒரே குரலில் !

கேரளாவில் அரசு ஆண்டு கொண்டு இருக்கும் கட்சி ,எதிர் கட்சி 
இரண்டும் தமிழ் நாட்டுக்கு எதிராய் ஒலிக்கின்றது
அந்த இரண்டு கட்சி தலைவர்களும் கேரளா மண்ணின் மைந்தர்கள் 
மலையாளிகளே தலைவர்கள் !

தமிழ் நாட்டில் அணு உலை வேண்டாம் தமிழ் நாட்டு மக்களுக்கு 
பாதுகாப்பு இல்லை தமிழ் மக்கள் போரட்டம் !

தமிழ் நாட்டு மக்களின் பாதுகாப்பு எமக்கு தேவை இல்லை 
தமிழ் நாட்டு உரிமையை பாதுகாக தேவை இல்லை 
எமக்கு இந்தியா பாதுகாப்பு தான் முதல் இடம் 
எமக்கு இந்தியா தேசியம் தான் முதல் இடம் 
அணு உலையை திறப்போம் 
ஒரே குரலில் !

தமிழ் நாட்டினை ஆண்டு கொண்டு இருக்கும் கட்சி ஜெயலதா தலைமையில் 
உள்ள அதிமுக முன்னர் தமிழ் நாட்டினை ஆண்ட கட்சி கருணா நிதி தலைமையில் 
உள்ள திமுக இந்த இரண்டு கட்சிகளின் தலைவர்களும் எந்த மாநிலத்தின் 
மண்ணின் மைந்தர்கள் என்று தெரிந்து கொண்டு தமிழன் சிந்தித்து செயற் பட்டால் 
தமிழ் நாட்டில் 90 வீதம் பிரசனை முடிபுக்கு கொண்டு வர முடியும் !

No comments:

Post a Comment