Thursday, February 16, 2012

இறுதிப் போரில் அணு ஆயுதங்களை பாவித்த சிறிலங்கா படையினர்?


தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் சிறிலங்கா அரச படையினர் அணு ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்று அமெரிக்காவுக்கு தகவல் கிடைத்து இருக்கின்றது.
தமிழ் நாட்டில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை அகதிகளில் ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியாக இத்தகவலை சொல்லி இருக்கின்றார்.
தமிழ் நாட்டு முகாம்களில் உள்ள அகதிகளில் ஒரு தொகையினரை அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகள் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதி பகுதியில் நேரில் சந்தித்து உரையாடி இருக்கின்றனர்.
அப்போதே அகதிகளில் ஒருவர் முல்லைத்தீவு மீதான தாக்குதலின்போது அரச படையினர் அணு ஆயுதங்களை பாவித்து இருக்கின்றனர் என்று திடமாக சொன்னார்.

இறுதி யுத்தத்தில் அரச படையினர் இரசாயன் மற்றும் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது பொதுவாக தமிழ் அகதிகளின் அபிப்பிராயமாக இருந்து உள்ளது.
துணைத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இருந்து இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைத்து உள்ளது.

No comments:

Post a Comment