தமிழ் மக்கள் ஆவலுடன், பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது காத்து நிற்கும் விடையம் என்னவென்றால், அது சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள கொலைக்களங்கள் பாகம்- 2 தான்.
இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது.
கொலைக்களங்கள் பாகம்- 2இன் தயாரிப்பாளர்களை அணுகிய சில தமிழர்கள், தேசிய தலைவர் இறந்துவிட்டதாகவும் அதுதொடர்பான செய்தியையும் இதில் இணைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்
தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் இருப்புக் குறித்து காலம் தான் பதில்சொல்லவேண்டும் ! அவரின் நிலைகுறித்து ஊகங்களையும் அனுமானங்களையும் தெரிவிக்க முடியாது. இலங்கை அரசானது அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து, தொலைக்காட்சியில் காட்டிய அவரது புகைப்படத்தை தமிழ்மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
தன்னை ஒரு நடுநிலையாளர் எனக் காட்டிக்கொள்ள சனல் 4 தொலைக்காட்சியானது இதுபோன்ற சில கட்சிகளை தமது ஆவணப்படத்தில் இணைத்திருக்கலாம். ஆனால் தேசிய தலைவர் தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்தும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா ? என்பது பெரும் சந்தேகமாக உள்ளது. எனவே சனல் 4 தொலைக்காட்சி காட்டவிருக்கும் இந்த ஆவணப்படத்தில் வரும் தேசிய தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரிய விடையங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருத்தல் நல்லது. இவ்வாறானதொரு காட்சி இந்த ஆவணப்படத்தில் வருகின்றது என்பதனை நாம் முன்கூட்டியே அறியத்தர விரும்புகிறோம். இதனைத் தமிழ் மக்கள் தெரிந்துவைத்துக்கொண்டு தான் இந்த ஆவணப்படத்தை பார்ப்பது நல்லது !
No comments:
Post a Comment