Tuesday, March 06, 2012

ஐநா சபையிடம் நீதி கேட்டு நடைபயணம் மேற்கொண்ட மூவர் நவநீதம்பிள்ளையிடம் மகஜர் கையளிப்பு!


ஐ.நா சபையிடம் ஈழத்தமிழர்களுக்கு நீதி கேட்பதற்காக நீதிக்கான நடைப்பயணம் மேற்கொண்ட மூவரும் இன்று முற்பகல் 11 மணியளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களை சந்தித்த அவர்கள் தாம் நடந்து வந்த நோக்கத்தை கூறி, ஐந்து அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினைக் கையளித்தனர்.
இன்று பிற்பகல் 01:50 மணியளவில் ஜெனிவாவின் தொடரூந்து நிலையத்தில் இருந்து எழுச்சிப் பேரணி சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அடங்கிய பாதாகைகள் ஏந்திய வண்ணம் ஐ.நாவை நோக்கிச் சென்றனர்.





தமீழிழத் தேசியக் கொடி, தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களை தாங்கிய வண்ணமும் எங்கள் தலைவன் பிரபாகரன், எங்களுடைய நாடு தமிழீழம் என்ற கோசங்கள் எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் ஐநா முன்றலை நோக்கி நகர்கின்றனர்.

No comments:

Post a Comment