Wednesday, March 28, 2012

இனி இந்த வாசகம் நம் ஒவ்வொருவரின் திருவாசகம் ஆகட்டும் !



இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.கடந்த 2009ம் ஆண்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கலந்துகொண்டு சீமான் பேசிய போது, அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராகப்பேசியதாக ஒதியஞ்சாலை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குக்காக அடிக்கடி புதுச்சேரி சென்று நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார் சீமான். இந்நிலையில் இன்று புதுச்சேரி நீதிமன்றம், இந்த வழக்கில் இருந்து சீமானை விடுவித்து உத்தரவிட்டது.

சீமான் பேசியதில் எவன் ஆண்மையும் பாதிக்கப்படவில்லை. மாறாக தமிழனுக்கு ஆண்மை அதிகரித்தது . ஆகவே சீமான் விடுதலை பட்டு இருக்கிறார் . அவர் பேசிய இறையாண்மைக்கு எதிரான வாசகம் என்பது இதுதான் சொல்லப்படுகிறது.
'ஏய் சிங்களவனே ! எங்கள் மீனவனை நீ தாக்கினால், இங்கே (தமிழகத்தில் படித்துக் கொண்டிருக்கிற) உங்கள மாணவனை தாக்குவேன் '

No comments:

Post a Comment