Sunday, June 03, 2012

பிரான்சு பாரிசில் தமிழ் மொழி பொதுத் தேர்வு 2012 நேற்று சிறப்பாக இடம்பெற்றது!

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தினரின் ஏற்பாட்டில் பிரான்சில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு நடாத்தப்படும் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு நேற்று 02.06.2012 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

பாரிசு நகருக்கான தேர்வு  RER B LAPLACE  MAISON DES EXAMENS 7 Rue Emest Renan 94110 ARCEUILஎன்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் இடம்பெற்றது.



பாரிசில் MAISON DES EXAMENS மண்டபத்தில்1 முதல் ஆண்டு 12 வரை மாணவர்கள் தமிழ் மொழி பொதுத்தேர்வுக்குத் தோற்றினர்.

நேற்றுக் காலை 10 மணிக்கு தாயகவிடுதலைப் போரில் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து தேர்வு வினாத் தாள்கள் பிரதம மேற்பார்வையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு திறக்கப்பட்டன. தொடர்ந்து  தேர்வுகள் ஒழுங்கான முறையில் இடம்பெற்றன.

மாணவர்கள் தேர்வு எழுதி வரும்வரை பெற்றோர்கள் கடுமையான வெய்யிலுக்கு மத்தியில் காத்துநின்றனர்.

இதேவேளை, பிரான்ஸின் வெளி மாவட்டங்களில் 8 பிரதேசங்களுக்கு 7 தேர்வு மண்டபங்களில் தமிழ் மொழி பொதுத்தேர்வு சிறப்பாக இடம்பெற்றது. Nice, Beau Soleil, Mulhouse, Gien, Rennes, Turs, Stras Burge, Toulouse ஆகிய பகுதிகளில் தமிழ்ச்சோலை மாணவர்கள் தமிழ் மொழி பொதுத்தேர்வுக்குத் தோற்றினர்.

இதேவேளை, தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவை ஒழுங்கமைப்பில் ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்தத் தமிழ் மொழிப் பொதுத் தேர்வு ஒரே நாளில் இடம்பெற்றது. ர












No comments:

Post a Comment