கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னால் கொடியவன் வந்தபோது கொட்டும் பனியினையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கில் திரண்டு கொதித்தெழுந்தீர்கள்.
கெடியவனே, கொலைகாரனே வெளியேறு என்ற முழக்கத்துடன் எழுந்தீர்கள் அது உலகத்தின் மனச்சாட்சியினை அன்று தட்டியது தப்பிப்பிளைத்தேன் என்று அன்று தப்பி ஓடினான் இன்று திருட்டு தனமாக கள்ளத்தனமாக வருகிறான்.
பிரித்தானிய நாட்டின் பேரரசியின் நிகழ்வில் பங்கெடுக்க வருகிறான். அந்நாட்டு அரசாங்கதிற்கும் மக்களுக்கும் சொல்வோம் அமைச்சர்களுக்கும் ஏழைகளுக்கும் ஊடகங்களுக்கும் சொல்வோம். பிரித்தானியாதான் இலங்கைத் தீவினை விட்டு 1948 பெப்ரவரி 4ஆம் திகதி வெளியேறும் போது எங்கள் சொந்த பூமியான தமிழீழத்தையும் சிங்களவன் காலடியில் வைத்து பூட்டிவிட்டு போனீர்கள் உங்களுக்குத்தான் பொறுப்பிருக்கின்றது.
இவ்வளவு படுகொலையினையும் சிங்களவன் எத்தனை ஆண்டுகளாக செய்துவந்தான். இப்போது அவன் எங்கு சென்றாலும் போய் முழக்கம் எழுப்புங்கள் வெளியேறு என்று எம் மனக்கண் முன்னே நினைத்து பாருங்கள் வானிலே தடைசெய்யப்பட்ட குண்டுகளை வீசி மக்களை கொன்றான். பட்டிணிபோட்டு பொருளாதார தடைபோட்டு தமிழ்மக்களை கொன்றான் ஏழு வல்லரசுகளின் ஆயுதபலத்துடன் தமிழினத்தை அழித்தான்.
மண்ணை காக்க தாயத்தை காக்க ஆயிரம் மடங்கு ஆயுத பலத்தை உலக நாடுகள் கொடுத்தபோது அதனை எதிர்து நின்று போராடிய எங்கள் மாவீரர்களை எண்ணிப்பாருங்கள். இந்த கொடியவனை எதிர்த்து கொலைகாரனே வெளியே போ என்பது உலகத்தின் மனச்சாட்சியின் கதவுகளை மீண்டும் தட்டும் இனப்படுகொலை செய்தவனை பன்னாட்டு நீதிமன்ற கூண்டிலே நிறுத்த வேளை வந்திருக்கின்றது என்று உணர்த்துவதற்கு பயன்படும்.
கடந்த ஆண்டு லண்டன் நகரில் நீங்கள் திரண்டு எழுந்து மகிந்தவினை விரட்டி அடிக்கப்பட்டதன் விளைவாக அதுவரை செவிடாக இருந்த பலநாடுகளின் காதுகள் திறந்துகொண்டன. மூடிக்கொண்ட கண்கள் திறக்க ஆரம்பித்தன. ஈழத்தில் சிங்கள குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும் சிங்களவன் வெளியேற்றப்பட வேண்டும். பாலஸ்தீனத்திற்கு சுதந்திரத்தை கொடுத்து தீரவேண்டிய கட்டத்திற்கு வந்துவிட்டோமே என்று இதுவரையும் படைபலத்தினை நம்பி இருந்து ஸ்ரேலும் யூதர்களும் நம்பி இருந்த இந்த வேளையில் தாயகம் மலர்வதற்கு கொடியவனை கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்கு ஆர்த்தெழுங்கள் ஈழத்தில் துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மக்களை மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள்.
எழுங்கள் ஆர்த்தெழுங்கள் வெளியேறு வெளியேறு கொடியவனே வெளியேறு என்று முழக்கம் எழட்டும் நீங்கள் எழுப்புகின்ற அந்த போர் முழக்கம் தான் கொடியனை கூண்டில் நிறுத்தவும் அவன் எங்கும் செல்ல முடியாது அவனும் சரி கோத்தபாயக்களும் பசில்களும் எங்கும் கால்எடுத்து வைக்க விடாத நேரம் வந்திருக்கின்றது எழுங்கள் ஆர்த்தெழுங்கள். சிந்தப்பட்ட குருதியினை எண்ணிப்பாருங்கள்.
மடிந்து போன நம் உறவுகளை எண்ணிப்பாருங்கள் அவர்கள் அநாதைகளான அவலக்குரல் எங்கும் கேட்கவில்லையோ என்று எழுப்பி அந்த கணத்தினை எண்ணிப்பாருங்கள் எழுங்கள் உங்களால் முடியும் லட்சக்கணக்கில் எழுங்கள் இனப்படுகொலை செய்த மாபாவிகளை மனிதகுலம் மன்னிக்க முடியது என்கின்றதை உணர்த்துகின்ற வகையில் பொங்கி எழுங்கள் ஆவேச குரல் எழுப்புங்கள் விண்ணதிர முழக்கம் எழட்டும் கொடியவனே வெளியேறு கொலைகார றாஜபக்கச லண்டனை விட்டு வெளியேறு பிரித்தானிய எல்லைகளை விட்டு வெளியேறு ஓடிப்போ இந்த குரல் எங்கும் ஒலிக்கட்டும் வீறுகொண்டெழட்டும் இளம் வேங்கைகளே புறப்படுங்கள் அண்ணன்மார்களே புறப்படுங்கள் என்னருமை தாய்மார்களே சகோதரிகளே புறப்படுங்கள்.
அறப்போர் களமாக எழுந்து கொடியவன் றாஜபக்ச லண்டன் நகரில் இருந்து விரட்டப்படுவதற்கு பிரளயமென எழுந்தார்கள் பொங்குமா கடல்அலை வீசுவதைபோல் எழுந்தார்கள் குமுறும் எரிமலை சீறுவதை போல் எழுந்தார்கள் என்பதை உலகத்தின் எல்லா நாடுகளும் கவனிக்கட்டும் கண்டிப்பாக கவனிக்கும்.
அதன் மூலமாக இனப்படுகொலைக்கு கூண்டில் நிறுத்துவது ஒருகட்டம் சிங்களக்குடியேற்றங்கள் வெளியேற்றப்பட்டு சுதந்திர தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டியது அடுத்தகட்டம் அதில் புவியெங்கும் இருக்ககூடிய ஈழத்து சகோதரங்கள் அந்தந்த நாடுகளில் வாக்கெடுப்பில் பங்கெடுக்ககூடிய வேலையினை ஜ.நா மன்றமும் உலக நாடுகளும் செய்ய வேண்டிய வேளை வந்திருக்கிறது. அந்த கோரிக்கை நியாயத்தினை எல்லோரும் உணர ஆரம்பித்திருக்கின்றார்கள் இந்த கட்டத்தில் ஈழத்தமிழருக்கு துரோகம் செய்த கொலைகார றாஜபக்சவிற்கு இதுவரை உதவியை செய்தவர்களும் இனிமேலும் உதவி செய்யகூடாது என எச்சரிக்கை மணியோசையாக உங்கள் போரட்டகுரல் எழுக கொடியவனை விரட்டி அடிப்பதற்குபுறப்படுங்கள்....
போர்முழக்கம் எழுப்புங்கள்........ வெளியேற்றுங்கள்.......
No comments:
Post a Comment