Saturday, June 30, 2012

இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்தவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.






மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள தமிழர்கள் செறிந்து வாழும் லிட்டில் இந்தியா (பிரிக்பீல்ட்ஸ்) பிரதேசத்தில் இலங்கை அகதிகளுக்கு நிதி சேகரித்த மக்கள் நீதி கட்சியின் உறுப்பினர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மக்கள் நீதி கட்சியின் செய்தி பிரிவு தலைவரான எம்.எஸ். அர்ஜூன், மோட்டார்
சைக்கிளில் வந்த இரண்டு பேரில் ஒருவர், தனது முகத்தில் பல தடவைகள் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக கூறியுள்ளார்.

பங்ஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அர்ஜூனனுக்கு முகத்தில் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாக அவரது மகன் கலைமுகிலம் தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் குறித்து மலேசிய அரச காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment