Thursday, July 12, 2012

சில படைவீரர்கள் உத்தரவுகளை மீறி போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டனராம் - மெல்ல மெல்ல மனந்திறக்கிறார் கோத்தபாய!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது ஒரு சில இராணுவ வீரர்கள் போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கோத்தபாய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு இராணுவ சட்டங்களுக்கு அமைய கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும், கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தப்பிக்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் சில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விசேட பொறி முறைமையொன்று காணப்படுவதாகவும், அந்தப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது பற்றி விசாரணை செய்ய இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட நபர்கள் அல்லது குழு தொடர்பில் உரிய ஆதாரங்கள் இருந்தால் அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களை பாதுகாப்பத்தில் கூடுதல் சிரத்தை காட்டிய போதிலும், யுத்தத்தின் போது ஓரளவு பொதுக்கள் இழப்புக்களை தவிர்க்க முடியாதுபோனது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
source:chithi

No comments:

Post a Comment