Thursday, August 16, 2012

டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் தெடர்பில் தமிழகம் முழுவதும் விளக்கப் பொதுக்கூட்டங்கள்

6c34cea3c8b971740ef3a20b6db87221சென்னையில் டெசோ அமைப்பு சார்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டுத் தீர்மானங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொதுக்கூட்டங்கள், கலைஞரின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 20ஆம் திகதி  முதல் 30ஆம் திகதிவரை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்  நடைபெவுள்ளதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

இதன்போது எதிர்வரும் 25ஆம் திகதி அம்பத்தூரில் நடைபெறும் கூட்டத்தொடரில்  கலைஞர் கரந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் ஆ.ராசா , திருச்சி சிவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி அந்தந்த மாவட்ட கழக செயலாளர்கள் எழுச்சியுடனும் சிறப்புடனும் விளக்கமளிக்கவேண்டு்ம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பாக 25ஆம் திகதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், 26ஆம் திகதி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்துகொள்வார். 26ஆம் திகதி நெல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினும், 23ஆம் திகதி தர்மபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் துரைமுருகனும், 25ஆம் திகதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கனிமொழியும், 24ஆம் திகதி நீலகிரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சுப்புலெட்சுமி ஜெகதீசனும், 21ஆம் திகதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகர் வாகை சந்திரசேகரும், 23ஆம் திகதி மதுரை மாநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்புவும், 20ஆம் திகதி அரியலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் நடிகர் குமரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment