[விக்கிபீடியா படங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் வரவில்லை. வேறு இடத்திலிருந்து லிங்க் கொடுத்துள்ளேன்.]


நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என அனைவர்மீதும் நாட்டில் உள்ள யாருக்குமே நம்பிக்கை இல்லை என்பது தெளிவு. அவர்களைக் கேலி செய்யும் விதமாக உருவாக்கப்படும் கார்ட்டூன், ‘தேசம்’, ‘தேசியச் சின்னம்’, ‘தேசியக் கொடி’ ஆகிய அருவங்களைக் கேலி செய்வதாக ஆக்கி, ஏதோ அரதப் பழசான சட்டங்களைக் கையில் எடுத்து தண்டனை தரும் அளவுக்கு ஓர் அரசு செல்லுமானால் அந்த அரசு தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று.
முதலில் இந்த அபத்தங்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டும். அதற்காக அசீம் திரிவேதி போன்றோர் சில காலம் சிறையில் இருக்கவேண்டியுள்ளது. அவருக்கு என் வந்தனங்கள்.
No comments:
Post a Comment