Wednesday, October 10, 2012

அரியாலை கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

DSC0118அரியாலை மணியம் தோட்டப்பகுதி கிணற்றில் இருந்து பழைய ஷெல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர இன்று தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.
யாழ். புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்றின் உத்தரவின் பேரிலேயே இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிணற்றில் குண்டுகள் இருக்கின்ற தகவல் 512ஆவது படைப்பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து குண்டு அகற்றும் பிரிவினரால் உதவியுடன் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டன.
கிணற்றிலிருந்து மோட்டார் குண்டுகள் 240, கைக்குண்டுகள் 42, 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 8, குண்டுகளை செயலிழக்க வைக்கும் பியூஸ்
வகை 3 பெட்டிகள், கிளைமோர் 2, 12.7 கிராம் ரவைகள் 1615 போன்ற வெடிபொருட்கள் மீட்கப்பட்டு, குண்டு அகற்றும் பிரிவினரால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment