Saturday, November 24, 2012

விழி நீரில் வலி சுமந்து எமது கண்ணீர் அஞ்சலிகள்!

Rajappusபுலம் பெயர் மண்ணில் – எம்தழிழர்தமை ஒழுங்கிணைத்துஅரசியல்க் காய்நகர்த்தி நின்றபரிதியெனும் சூரியனை பாரிசில் கரும் புகார்கள்மறைந்ததடா – என் என் போம் தளராத உறுதியும் குலையாத ஞானமும் தானைத்தலைவனின் வழி காட்டலில் – வெற்றிக்களம் பல கண்ட தீரமும்எளிமை வாழ்க்கையும் எதற்கும் அஞ்சிடா – உணர்வும் தாயகப்பணியின்றி – சிறிதும் தன்னலங்கருதாத் தியாகமும் தன்னகத்தே கொண்ட எங்கள் பரிதியே! உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை – என்றபாரதி வரியின் நாயகனாய்த் திகழ்ந்தவனே! ‘உன் இழப்பால் – இன்று உலகத்தமிழினமேவிழிநீரில் வலி சுமந்துதவியாய்த் தவிக்கிறது”நீ விழிமூடித் தூங்கினாலும்நின் நினைவெல்லாம்புலம் பெயர் தழிழர் நாம்இருக்கும் வரை – கனவாகாஎதுவரினும் விடமாட்டோம்’எம் பணியை நீ நம்பு பரிதியாய் மதியாய்காரிருள் அகல உன்பணிதொடர்வோம்.

‘தமிழினத்தைச் சூழ்ந்துள்ள ஈனரை இனம் கண்டு ஒதுக்கிப் புறம் காண்போம்’தமிழீழ விடுதலை நோக்கியபாதையில் ஒற்றுமையாய் அணிதிரண்டு காய் நகர்த்திதமிழீழ மலர் காண்போம் – அதுவே தியாகத்தின் திருவுருவாம் – எம் பரிதிக்கு நாம் செய்யும்உண்மை அஞ்சலியாம் – ஆம்தன்தலைவனை, தந்தையை இழந்துதவிக்கும் குடும்ப உறவுகளோடு – எம் துயர்பகிர்ந்து அவர் பணி தொடரஉறுதி எடுப்போம்.
விழி நீரில் வலி சுமந்து
எமது கண்ணீர் அஞ்சலிகள்!
வீரர்கள் விழுவதில்லை
கோடிக்கனக்கானோர்களை உருவாக்கிவிடுவார்கள்

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சின் வீர அஞ்சலி

No comments:

Post a Comment