
குன்னூர் வெலிங்டன் இராணுவப் பயிற்சிசாலையில் இருந்து வெளியேறிய இலங்கை
அதிகாரிகள் பங்களூர் செல்ல கோவை விமானநிலையத்துக்குச் சென்றதாகத்
தெரிவிக்கப்படுகிறது. அங்கே திரண்ட மதிமுக வினர் பாரிய ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டதாக அதிர்வு இணயம் அறிகிறது. அத்தோடு தமிழகம் முழுவம் மோட்டார்
சைக்கிள் பயணம் மேற்கொண்டு, ஈழத் தமிழர்கள் தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இதன் ஒரு அங்கமாக அவர்கள்
நேற்றைய தினம்(புதன்) கோவையில் தமது விழிப்புணர்வு போராட்டத்தை அங்கே
நடத்தினார்கள். இதில் உல்லாசப்பயணியாக இந்தியாவுக்கு வந்த
வெள்ளைக்காரர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். (படங்கள்
இணைப்பு)



source:Athirvu

No comments:
Post a Comment