kayani_02
இலங்கை மற்றும் பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையில் உள்ள உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தானிய கூட்டுப்படை தளபதி ஜெனரல் கயானி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தியத்தலாவையில் நேற்று நடைபெற்ற இராணுவ அணிவகுப்பின் பின்னர் கருத்துரைத்த அவர்,
இலங்கையும் பாகிஸ்தானும் இராணுவ ஒத்துழைப்புகளில் முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் பாகிஸ்தானும் சமாதானத்தை விரும்பும் நாடுகளாகும்.
எனவே சமாதானத்தை கருதி பிராந்திய ரீதியில் இராணுவத்தை வலுவுள்ளதாக வைத்திருக்கவேண்டிய அவசியம் உள்ளதாக தளபதி ஜெனரல் கயானி தெரிவித்துள்ளார்.

இதன்போது நாடுகளின் இறைமை பாதிக்கப்படக்கூடாது என்றும் கயாணி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் 30 வருடபோரின் போது பாகிஸ்தான் இலங்கை இராணுவத்துக்கு உறுதுணையாக செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

kayani_01 kayani_02 kayani_03 kayani_04