Thursday, September 26, 2013

புலிகளின் விமான எதிர்பு ஏவுகணையை காட்சிப்படுத்தி சம்பாதிக்கும் இராணுவம் !



விடுதலைப் புலிகளோடு நடந்த இறுதி யுத்தத்தில், தாம் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய சில ஆயுதங்களையும் உபகரணங்களையும் காட்சி படுத்தி இலங்கை இராணுவம் பெரும் பணத்தை சம்பாதித்து வருகிறது. புதுக்குடியிருப்பில் உள்ள மந்துவில் பிரதேசத்திலேயே மேற்படி இதனை இராணுவம் காட்சிப்படுத்தி வருகிறது. ஏற்கனவே புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல், மற்றும் ஆட்டிலறி எறிகணைகளை இலங்கை இராணுவம் ஏற்கனவே காட்சிப்படுத்தி இருந்தது. ஆனால் புலிகள் பாவித்த விமான எதிர்பு ஏவுகணைகளை தாம் புதிதாக காட்சிப்படுத்தியுள்ளதாக இவர்கள் தெரிவித்து வருகிறார்கள். (அப் புகைப்படங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது).


இது ஒரு புறம் இருக்க, இராணுவத்தினரே இந்தக் காட்சிச்சாலைக்கு அருகாமையில் கன்டீன் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்கள். சிறு கடைகள் , டீ காபி குடிக்கும் இடம் குளிர்பாணம் விற்கும் நிலையம் என்று அப் பகுதி அனைத்திலும் பல சிறிய கடைகளை இவர்கள் ஆரம்பித்துள்ளார்கள். தென்னிலங்கையில் மற்றும் யாழில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் புலிகளின் ஆயுதங்களை பார்த்துவிட்டு பின்னர், இராணுவத்தின் கடைகளுக்குச் சென்று அங்கே டீ குடிக்கிறார்கள். இப்படியும் இலங்கை இராணுவம் பிழைப்பு நடத்துகிறது.







source:athirvu

No comments:

Post a Comment