Saturday, September 28, 2013

ராஜபக்ஷவின் தம்பியை தேடி இரவு இரவாக திரியும் உணர்வாளர்கள் !




ராஜபக்ஷவின் தம்பி ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள புதுச்சேரியில், தற்போது தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் நடைபெறவுள்ள வணிகச் சந்திப்பு ஒன்றே இவர் கொழும்பில் இருந்து அங்கே சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து நாம் தமிழர் இயக்கத்தினர் மற்றும் தமிழின உணர்வாளர்கள் பலர் புதுச்சேரியில் வீதிகளில் பாரிய தேடுதல்களை நடாத்திவருகின்றனர். பின்னர் அங்குள்ள "சன் -வே" என்னும் நட்சத்திர விடுதியில் அவர் தங்கியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது இதனையடுத்து இந்த விடுதிக்கு முன்னால் பல தமிழ் உணர்வாளர்கள் கூடியுள்ளார்கள். இதனால் குறிப்பிட்ட விடுதி முற்றுகைக்கு உள்ளாகலாம் என்று அஞ்சி, பொலிசார் அங்கே குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை அடுத்து சன் வே நிர்வாகிகள் வெளியே வந்து தாம் ராஜபக்ஷவின் தம்பியை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் அவர் தங்க தாங்கள் இடம்கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள். இதன் பின்னரே அங்கே குவிந்த உணர்வாளர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்கள். இருப்பினும் புதுச்சேரியில் உள்ள ஏதோ ஒரு விடுதியில் தான் அவர் மறைந்திருக்கவேண்டும், மாட்டினால் மாறுகை மாறுகால் எடுத்துவிடுவோம் என்று பேசிய வண்ணம் நாம் தமிழர் உணர்வாளர்கள் கூறிவருகிறார்கள். ஒட்டு மொத்தத்தில் இவர் சிக்குவாரா இல்லை தப்பி ஓடுவாரா என்று தெரியவில்லை. காலை இதுதொடர்பான மேலதிகச் செய்திகளை நாம் பார்க்கலாம்.

No comments:

Post a Comment