mannar-massgraveமன்னார், திருக்கேதிஸ்வரம் மனித புதைகுழி 22 வது தடவையாக நேற்று புதன்கிழமை தோண்டப்பட்ட போது மேலும் 2 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராதபுரம் சட்ட வைத்திய நிபுணர் டி.எல்.வைத்தியரெட்ன தலைமையில் நேற்று புதன்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை குறித்த மனித புதைகுழி தோண்டப்பட்டது. இதன் போதே 2 மனித எலும்புக்கூடுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களின் தொகை 61 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டு 3 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டடு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை மீட்கப்பட்டுள்ள 61 மனித எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களில் 35 மனித எலும்புக்கூடுகள் பொதி செய்யப்பட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும்  இன்று வியாழக்கிழமையும் 23 வது தடவையாக குறித்த மனித புதைகுழி மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
mannar-massgrave
20140212-213151.jpg
20140212-213200.jpg
20140212-213207.jpg
20140212-213240.jpg