கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் மொழி தமிழ்ப் பாடத்தில் 1311 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலம் முழுவதும் முதல் மொழி தமிழ்ப் பாடத் தேர்வை 1327 மாணவர்கள் எழுதினார்கள்.
இதில் 1311 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 125-க்கு 123 மதிப்பெண்களைப் பெற்றனர்.
தூய அல்போன்ஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அர்ச்சனா, அக்ஷயா, கமபாபாய் உயர்நிலைப் பள்ளி மாணவர் கே.கார்த்திக், எஸ்.வினிதா ஆகியோர் 123 மதிப்பெண்கள் பெற்றனர்.
அர்ச்சனா 625-க்கு 557 மதிப்பெண்கள் (89.12 சதம்) பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-90, கன்னடம்-95, கணிதம்-81, அறிவியல்-80, சமூக அறிவியல்-88. அர்ச்சனாவின் தந்தை கோபால் கூலிவேலையும், தாய் மீரா வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.
அர்ச்சனா கூறியது: எனது தமிழாசிரியை கார்த்தியாயினி, ஆசிரியர் சாரதி ஆகியோர் அளித்த ஊக்கத்தின் காரணமாக தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகிறேன் என்றார் அவர்.
அக்ஷயா 625-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-80, கன்னடம்-72, கணிதம்-83, அறிவியல்-71, சமூக அறிவியல்-70.
அக்ஷயாவின் தந்தை சுரேஷ்பாபு உடல்நலக் குறைவால் வேலையில்லாமல் உள்ளார். இவரது தாய் விசாலாட்சி வீட்டுவேலை செய்து வருகிறார்.
அக்ஷாô கூறியது: தமிழில் 123 மதிப்பெண்கள் பெற எனது தமிழாசிரியை கார்த்தியாயினி, பெற்றார் அளித்த ஊக்கமும், ஒத்துழைப்புமே காரணம். வீட்டில் படிக்க இயலாததால் பள்ளியில் 8 மணிவரை படிக்க வாய்ப்பு தந்தனர். சிறப்பு வகுப்புகள் நடத்தினர். சிறந்த கணக்காளராக விரும்புகிறேன் என்றார் அவர்.
கார்த்திக் 625-க்கு 461 மதிப்பெண்கள் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-75, கன்னடம்-66, கணிதம்-51, அறிவியல்-64, சமூக அறிவியல்-70.
கார்த்திக்கின் தந்தை குமார் காவலாளியாகவும், தாய் செந்தாமரை வீட்டுவேலையும் செய்து வருகிறார்கள்.
கார்த்திக் கூறியது: தமிழாசிரியை ஸ்ரீமதி, தலைமை ஆசிரியை சரளா ஆகியோர் ஊக்கமளித்தனர். எனது படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். பொறியாளராக விரும்புகிறேன் என்றார் அவர்.
எஸ்.வினிதா 625-க்கு 527 மதிப்பெண்கள் (84.32 சதம்) பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-670, கன்னடம்-95, கணிதம்-65, அறிவியல்-82, சமூக அறிவியல்-95.
தமிழ்ப்பாடத்தில் 121 மதிப்பெண்களை 13 பேரும், 120 மதிப்பெண்களை 12 மாணவர்களும் பெற்றனர்.source:denamani
கர்நாடக எஸ்எஸ்எல்சி தேர்வில் மாநிலம் முழுவதும் முதல் மொழி தமிழ்ப் பாடத் தேர்வை 1327 மாணவர்கள் எழுதினார்கள்.
இதில் 1311 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 4 மாணவர்கள் 125-க்கு 123 மதிப்பெண்களைப் பெற்றனர்.
தூய அல்போன்ஸ் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் அர்ச்சனா, அக்ஷயா, கமபாபாய் உயர்நிலைப் பள்ளி மாணவர் கே.கார்த்திக், எஸ்.வினிதா ஆகியோர் 123 மதிப்பெண்கள் பெற்றனர்.
அர்ச்சனா 625-க்கு 557 மதிப்பெண்கள் (89.12 சதம்) பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-90, கன்னடம்-95, கணிதம்-81, அறிவியல்-80, சமூக அறிவியல்-88. அர்ச்சனாவின் தந்தை கோபால் கூலிவேலையும், தாய் மீரா வீட்டு வேலையும் செய்து வருகின்றனர்.
அர்ச்சனா கூறியது: எனது தமிழாசிரியை கார்த்தியாயினி, ஆசிரியர் சாரதி ஆகியோர் அளித்த ஊக்கத்தின் காரணமாக தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகிறேன் என்றார் அவர்.
அக்ஷயா 625-க்கு 499 மதிப்பெண்கள் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-80, கன்னடம்-72, கணிதம்-83, அறிவியல்-71, சமூக அறிவியல்-70.
அக்ஷயாவின் தந்தை சுரேஷ்பாபு உடல்நலக் குறைவால் வேலையில்லாமல் உள்ளார். இவரது தாய் விசாலாட்சி வீட்டுவேலை செய்து வருகிறார்.
அக்ஷாô கூறியது: தமிழில் 123 மதிப்பெண்கள் பெற எனது தமிழாசிரியை கார்த்தியாயினி, பெற்றார் அளித்த ஊக்கமும், ஒத்துழைப்புமே காரணம். வீட்டில் படிக்க இயலாததால் பள்ளியில் 8 மணிவரை படிக்க வாய்ப்பு தந்தனர். சிறப்பு வகுப்புகள் நடத்தினர். சிறந்த கணக்காளராக விரும்புகிறேன் என்றார் அவர்.
கார்த்திக் 625-க்கு 461 மதிப்பெண்கள் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-75, கன்னடம்-66, கணிதம்-51, அறிவியல்-64, சமூக அறிவியல்-70.
கார்த்திக்கின் தந்தை குமார் காவலாளியாகவும், தாய் செந்தாமரை வீட்டுவேலையும் செய்து வருகிறார்கள்.
கார்த்திக் கூறியது: தமிழாசிரியை ஸ்ரீமதி, தலைமை ஆசிரியை சரளா ஆகியோர் ஊக்கமளித்தனர். எனது படிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்தனர். பொறியாளராக விரும்புகிறேன் என்றார் அவர்.
எஸ்.வினிதா 625-க்கு 527 மதிப்பெண்கள் (84.32 சதம்) பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-123, ஆங்கிலம்-670, கன்னடம்-95, கணிதம்-65, அறிவியல்-82, சமூக அறிவியல்-95.
தமிழ்ப்பாடத்தில் 121 மதிப்பெண்களை 13 பேரும், 120 மதிப்பெண்களை 12 மாணவர்களும் பெற்றனர்.source:denamani

No comments:
Post a Comment