Tuesday, June 10, 2014

விசாரணைக் குழுவின் இரண்டாவது நிபுணர் ஆசியரா – ஆபிரிக்கரா?

UN Human_Rights_Councilஜெனிவாவில் இன்று ஆரம்பமாகும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான குழுவின் விபரத்தை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிடவுள்ளார்.
இரண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 15 பேர் கொண்டதாக இந்த விசாரணைக் குழு அமையவுள்ளது.
இந்த விசாரணைக் குழுவுக்கு, நியூசிலாந்தின் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் அம்மையார் தலைமை தாங்கவுள்ளார்.
எனினும், இரண்டாவது நிபுணர் யார் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இந்த இடத்துக்கு இரண்டு பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், கூறப்பட்டது.
அதேவேளை, இந்த இரண்டாவது நிபுணர் ஆபிரிக்கா அல்லது ஆசியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment