முல்லைத்தீவு வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில், விடுதலைப் புலிகள் புதைத்த மசகு எண்ணை பரல் பரலாக மீட்க்கப்பட்டுள்ளது என்ற செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. இதனை ராணுவத்தினர் முன்னரே மீட்டிருந்தாலும் , மீண்டும் புதைத்துவிட்டு நேற்று தான் தாம் கண்டு பிடித்து எடுத்துள்ளதாக கூறுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கையில் உள்ளவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். வெள்ளமுள்ளி வாய்க்கால் கடற்கரைப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் இதனை மீட்டுள்ளனர் என சிங்கள இணையங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது, கடற் புலிகளினால் தங்களது படகுகளுக்கு பயன்படுத்த இவை பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவம் குறிப்பிட்டுள்ளது. மேலும் யுத்த காலத்தில் அந்தப் பகுதியில் கடற்புலிகளின் முகாம் அமைந்திருந்ததாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மகிந்தரின் செயல்கள் அப்படியே சிங்களவர்களை புல்லரிக்கவைக்கும் ? ஜனவரி 8ம் திகதிக்கு முன்னர் என்ன எல்லாம் தோண்டி எடுப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவை அனைத்தும் புலிகளுடையவை என்று மட்டும் சொல்லுவார்கள். அதனை செய்த சாதனையாளராக மகிந்தவை புகழ்வார்கள்.
source:athirvu
No comments:
Post a Comment