Thursday, January 01, 2015

புலிகளின் டொரன்டோ கடைகளில் மைத்திரியின் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது: பந்துல !

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான டொரன்டோ கடைகளில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கனடாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதரக அதிகாரி பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்த பின்னர் இவ்வாறு பாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட கடைகளில் இவ்வாறு மைத்திரிபாலவின் படங்கள்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வரும் பல இடங்களிலும் இவ்வாறு மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதற்கு மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். லண்டனிலும் இவ்வாறு படங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் லண்டனில் உள்ள எந்த ஒரு தமிழ் கடைகளிலும் மைத்திரியின் படங்கள் ஒட்டப்பட்டு இருக்கவில்லை.
மைத்திரியை புலிகளின் ஆதரவாளர் என்று காட்டி, அவருக்கு கிடைக்க இருக்கும் சிங்கள வோட்டுகளை தடுக்கவே இவ்வாறு மகிந்த அரசாங்கம் யுக்தியை கையாண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
source:athirvu

No comments:

Post a Comment