Sunday, January 11, 2015

பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு தப்பி சென்றார்!

முன்னாள் பொருளாதார அமைச்சரும், மகிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 2.55 அளவில், எமிரேட்ஸ் எயார் வேய்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் அவர் சென்றுள்ளார்.

அவருடன் அவரின் மனைவியும் உடன்சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ மகிந்தவின் ஆட்சி காலத்தில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் நாட்டில் இருந்தால், பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment