Friday, January 09, 2015

அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமியிடம் அழுது புலம்பிய மகிந்த !

இன்று அதிகாலை மகிந்தரை இந்தியாவில் இருந்து தொலைபேசியூடாக தொடர்புகொண்டுள்ளார், இந்திய அரசியல் கோமாளி சுப்பிரமணிய சுவாமி. நீங்கள் தோற்றுவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை, என்று கூறியுள்ளார். சிறிய வீதத்தில் தான் மைத்திரி வென்றுள்ளார் என்றும், அவரது வெற்றிக்கு தமிழர்களே காரம் என்றும் கூறியுள்ளார் சுப்பிரமணிய சுவாமி. இதனை மகிந்தர் முதலிலேயே தடுத்திருக்கவேண்டும், என்றும் தமிழர்கள் செய்த இச்செயலேஉங்கள் அரசியல் வாழ்வுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

அவர் இந்தியப் பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கும்வேளை, தான் தொலைபேசி அழைப்பு கிடைத்திருக்கிறது. அருகில் நிற்பவர் ஒரு ஊடகவியலாளர் என்பதனைக் கூட மறந்து, மகிந்தரோடு தொலைபேசியில் உரையாடி உள்ளார். சுப்பிரமணிய சுவாமி மகிந்தரோடு உரையாடிய செய்தியை இந்திய ஊடகவியலாளரே கசியவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. உற்ற நண்பன் தோல்வியை தழுவியுள்ளான். நாலு ஆறுதல் வார்தை கூறாமல், தமிழர்கள் மேல் உள்ள துவேஷத்தை இன்னும் அதிகரிக்க சுப்பிரமணிய சுவாமி தூபமிட்டுள்ளார்.
ஆனால் என்ன பரிதாபம். மகிந்த தற்போது பல்லுப் பிடுங்கிய பாம்பு ஆகிற்றே. 

No comments:

Post a Comment