Tuesday, January 27, 2015

தலைபோற நேரத்திலும் “தலப்பா கட்டு” பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு அலையும் KP !

புலிகளின் ஆயுதக் கப்பல்களை காட்டிக்கொடுத்து , இந்திய “றோ” அமைப்போடு செயல்பட்டு பின்னர் கோட்டபாயவிடம் சரணடைந்தவர் KP என்பது யாவரும் அறிந்த விடையம். மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியுற்று ஒரு மூலையில் இருக்கிறார். கோட்டபாய என் நேரத்திலும் கைதாகலாம் என்ற நிலையில் பயத்தில் நடுங்கிக்கொண்டு இருக்கிறார். KP முன் நாள் புலிகள் உறுப்பினர் என்று அவர் மீது இலங்கை உச்ச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டும் உள்ளது. என் நேரம் என்றாலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

அவ்வாறு நடந்தால் KP கொழும்புக்குச் செல்லவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டு, பின்னர் வெலிகடை சிறையில் அடைக்கப்படுவார். இது இவ்வாறு இருக்க கோட்டபாயவுடன் கூட்டுச் சேர்ந்து நெரடோ என்னும் அமைப்பை இவர் ஆரம்பித்து நடத்தி வருகிறார். மேலும் தேசிய தலைவரால் பராமரிக்கப்பட்டு வந்த செஞ்சோலை இல்லத்தையும் இவரே , தற்போது பெருமைக்காக நடத்தி வருகிறார். இங்கே விழா ஒன்றை நேற்று முன் தினம் வைத்து, சிறுவர்களுக்கு தாம் உதவுவதுபோல நாடகம் ஆடி, இறுதியில் பிரியாணியை மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு அவர் வீடு சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. தலைபோற நேரத்திலும் தலப்பா கட்டு பிரியாணி சாப்பிட்ட ஆள் இவராதான் இருக்க முடியும்.
லண்டனில் இவருக்கு சில அடி வருடிகள் இருக்கிறார்கள். அவர்களே KP ஐ தூக்கிப் பிடிப்பது வழக்கம். கள்ளக் காதலிக்காக KPயின் உதவி பெற்ற நபர்களும் லண்டனில் தான் இருக்கிறார்கள். இவர்கள் யார் ? இவர்கள் தற்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற திகைப்பூட்டும் சம்பவங்கள் விரைவில் வெளியாகவுள்ளது. பிரித்தானியாவில் இயங்கிவரும் சில தமிழ் அமைப்புகளில் KPயின் கைக்கூலிகள் இணைந்து இருப்பதும், தேசிய அரசியல் பேசி ஊரை விற்கும் இக் கள்வர்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.

No comments:

Post a Comment