Saturday, March 28, 2015

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் - சிறிலங்கா தெரிவிப்பு

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

சிறிலங்காவின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல், விடுதலைப் புலிகளின் தடையை நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment