Thursday, April 02, 2015

பிரான்சில் வெள்ளைத் தமிழச்சி மரணம்!

france-02பிரான்சில் தமிழ் மக்களால் வெள்ளை தமிழச்சி என்றழைக்கப்பட்ட பவுல் லுயிய் வியோலெத் (Paula Lugi Violette) மரணமடைந்துள்ளார். வெள்ளை இனத்தைச் சேர்ந்த பவுல் லுயிய் வியோலெத் அவர்கள் ஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட


france-02

படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்து வந்துள்ளார். இதன்காரணமாக பிரான்சு வாழ் ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்டார்.

france-03

france-01

நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொண்டு, ஈழத்தமிழர்களுக்காய் குரல்கொடுத்து வந்துள்ளார். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை விடுதலைப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் என பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment