Friday, September 18, 2015

கருணாவின் வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையம் எது தெரியுமா ?


நேற்றைய தினம்(16) ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் இலங்கை தொடர்பான தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் 4வது சரத்திலேயே , எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தாம் முற்று முழுதாக ஏற்பதாக ஏற்கனவே மங்கள சமரவீர தெரிவித்து விட்டார். தற்போது , கருணா , தயா மாஸ்டர் , KP, ராம் , போன்றவர்கள் , வயிற்றில் புளியைக் கரைக்கும் விடையம் இதுவாக தான் இருக்க முடியும். இதில் இருந்து KP எப்படி என்றாலும் தப்பிவிடுவார் என்று தெரிகிறது.
ஆனால் செல்லாக் காசாக இருக்கும் மற்றும் , ராணுவத்திற்கு உதவி செய்து வந்த சில முன் நாள் விடுதலைப் புலிகள் தற்போது வசமாக மாட்டிக்கொண்டார்கள் என்பது மட்டும் புரிகிறது.

No comments:

Post a Comment