
ஜே.வி.பின் காலத்தில் மிகவும் கெடூரமான வேலைகளை செய்தவர்களுக்குகூட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் எமக்கு ஏன் பொதுமன்னிப்பு வழங்கவில்லை என்றும் தமிழ் கைதிகள் கேள்வி எழுப்பியதையும் அவர் நினைவுபடுத்தினார்.
சிலர் அரசியல் கைதிகளின் விடயத்தில் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்தால் இராணுவத்தினருக்கும் பொது மன்னிப்பு வழங்குமாறு கோருவது சிரிப்பிற்கிடமானது என்று தெரிவித்த அவர் தமிழ் கைதிகள் குற்றவாளிகல்லர் என்றும் சுட்டிக்காட்டினார். அரசியல் கைதிகள் இவ்வளவு காலமும் சிறையில் வாடுகின்ற நிலையில் அதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள நிலையில் அவர்களையும் இனி வரபோகும் குற்றவாளிகளையும் சம்பந்தப்படுத்திப் பேசுவது நகைப்பிற்கிடமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.source:athirvu
No comments:
Post a Comment