Saturday, August 06, 2011

இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் அமெரிக்க படை அதிகாரிகள் குழு விஜயம்

அமெரிக்கப் படை அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளது. கடந்த முதலாம் நாள் கிளிநொச்சி சென்ற அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் தலைமையிலான அமெரிக்கப் படை அதிகாரிகள் குழு, கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவையும் சந்தித்துப் பேசியுள்ளது.


அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இவர்கள் நேரில் ஆராய்ந்துள்ளனர்.

லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் கடந்த மாதமே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







  முகப்பு
Share

No comments:

Post a Comment