Saturday, August 06, 2011

விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரண்டாவது தலைவர் கைது!


தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச செயற்பட்டாளராக கருதப்படும் திருஞானசம்பந்தன் மணிவண்ணன் என்பவர் மலேசிய இரகசியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியாக செயற்பட்ட கஸ்ட்ரோ என்பவருக்கு இரண்டாவது தலைவராக செயற்பட்டவர் என்று சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட மணிவண்ணனை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மலேசிய அரசு தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய உள்விவகார அமைச்சர் நிசாமுதீன் ஹுசேன் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளராக செயற்பட்டட கே.பி மலேசியாவில் கைது செய்யப்பட்ட பின்னர் மணிவண்ணன் தலைமறைவாகியதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment