Monday, December 19, 2011

மீண்டுமொரு கூட்டம்!! இன்று அரசாங்கப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் அரசாங்கப் பிரதிநிதிகளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.
இச்சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பேராசிரியர் ரஜீவ விஜயசிங்ஹ, சஜின் டி வாஸ் குணவர்தன எம்.பி. ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், எம். சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த வாரமளவில் அதுகுறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றிய அறிக்கை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்காக வெளியிட்டு வைக்கப்படுமெனவும் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment