Monday, December 19, 2011

நோர்வேயின் இரட்டை வேடத்தினால் சீர் குலைந்தது யுத்த நிறுத்த உடன்படிக்கை!!

நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட இரட்டைவேட செயற்பாடே யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர் குலைப்பதற்கு ஏதுவாக அமைந்தது என்று நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
நோர்வே அரசாங்கம் ஒரு பக்கத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் பணிக்கு அனுசரணையாளர்களாக
இருந்துகொண்டு மறுபக்கத்தில் சமாதானம் மற்றும் யுத்தநிறுத்தம் சரியாக நடைமுறைப்படுத் தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் இரண்டுக்கு ஒன்று நேர்மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதனால் நோர்வே அரசாங்கத்தினால் எதனையும் சரிவர செய்துமுடிக்காமல் பெரும் குளறுபடி ஏற்படுவதற்கு உதவியிருக்கின்றது என்றும் இவ்வறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment