Tuesday, February 21, 2012

புலிகளை கொல்ல உத்தரவிட்டார் கோட்டா, அமெரிக்காவிடம் தொலைபேசி ஆதாரங்கள்!



யுத்தத்தின் இறுதி நாட்களில் சரண் அடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களை சுட்டுக் கொல்கின்றமைக்கான உத்தரவை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ பிறப்பித்து இருந்தார் என்பதற்கான தொலைத் தொடர்பு உரையாடல் ஆதாரங்கள் அமெரிக்காவின் கை வசம் உள்ளன.


இலங்கை அரசுக்கு இதை குறிப்பால் உணர்த்தி உள்ளார்கள் வோஷிங்டன் அதிகாரிகள்.

களத்தில் இருந்த இராணுவ தளபதிகளுடன் கையடக்கத் தொலைபேசி வலையமைப்பு மூலமாகதான் கோட்டா தொடர்பில் இருந்து இருக்கின்றார்.

இந்நிலையில் சரண் அடைய வந்த புலித்தேவன், நடேசன் போன்றவர்களை படுகொலை செய்கின்றமைக்கான உத்தரவை கோட்டா பிறப்பித்து இருந்தார் என்பதற்கான தொலைத் தொடர்பு உரையாடல்களை அமெரிக்க அதிகாரிகள் சேகரித்து வைத்திருக்கின்றனர்.

இவ்விடயம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலருக்கும், புலம்பெயர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் சிலருக்கும் ஏற்கனவே தெரிந்து இருக்கின்றது.

No comments:

Post a Comment