
தமிழர்களின் விடிவிற்காக தமிழீழ நினைவுகளோடு மரணத்தை அரவணைத்து தமிழீழ அன்னையின் மடியில் இருள் சூழ்ந்த தமிழரின் வாழ்வில் ஒளி வீசும் என்ற நம்பிக்கையோடு விழி மூடி உறங்குகின்ற மாவீரர்களின் கல்லறைகளுக்கு இம்
மூவருடனும் சேர்ந்து தாயகஉணர்வாளர்களும் சென்று அகவணக்கம் செலுத்தியதோடு மட்டுமல்லாமல் உங்கள் கனவுகள் நிறைவேறும் நாள் வரை தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஓயாது. உங்கள் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என்று Yverdon எனும் இடத்தில் உள்ள, மாவீரர்களின் நினைவுத்தூபியில் உறுதியெடுத்துக்கொண்டனர்.
புலத்தில் வாழ் அன்பிற்குரிய தமிழீழ உறவுகளே மார்ச் 5ம் திகதி ஒன்றுபட்டு எங்கள் உரிமைகளை ஐநாசபையிடம் கேட்பதற்கு நீங்கள் வரவேண்டும். இது கட்டாய அழைப்பு என கருதாமல் தமிழின வரலாற்றுத் தேவை கருதிய அழைப்பு. எனவே சிந்தித்து இன்றே புறப்பட தயாராகுங்கள்.


No comments:
Post a Comment