சிறிலங்காவில்
இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தமது விசாரணை அறிக்கையை அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்ற விவகாரங்களைக் கவனிக்கும் தூதுவர்
ஸ்டீபன் ராப் அடுத்தவாரம் அமெரிக்க நாடாளுமன்றின் செனட் சபையில்
சமர்ப்பிக்கவுள்ளார். இந்தத் தகவலை இராஜதந்திர வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா தொடர்பாக தூதுவர் ஸ்டீபன் ராப் அமெரிக்க செனட் சபைக்கு சமர்ப்பிக்கும் மூன்றாவது அறிக்கை இதுவாகும்.
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து நேரில் விசாரணைகளை நடத்துவதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஸ்டீபன் ராப் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் சிறிலங்கா அரசதரப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தார்.
அத்துடன் முல்லைத்தீவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய தகவல்களையும் அவர் சேகரித்திருந்தார்.
இந்தப் பயணத்தின் அடிப்படையிலேயே அவர் செனெட் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
No comments:
Post a Comment